பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பரங்கிங்காய் குதிரை முட்டை ஆகுமா?

நல்ல இலக்கியமென்றால், எத்தனை நந்திகள் வழிமறித்துப் படுத்துக்கொண்டாலும் இவை உரிய ஸ்தானத்தை அடைந்தே தீரும். பனைமரத்தில் ஊசியைச் சொருகிக் கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குருவின் சீடர்கள் போல, எத்தனைபேர் சுமந்து வந்தாலும் பரங்கிக்காய் குதிரை முட்டையாகி விடாது.

நெஞ்சு அழுத்தம் வேணும்

மதிப்புரை எழுதுகிறவனிடம் எதிர்பார்க்க வேண்டியது ஒன்றுதான். நல்ல இலக்கியத்தைக் காணும்பொழுது அதைத் தெரிந்து கொள்ளவும். பரிச்சயம் செய்து வைக்கவும் அவனிடம் திராணி வேண்டும். அப்படியே போலியைக் காணும்போது, யார் வந்து நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் அது போலி என்று சொல்லுவதந்கு நெஞ்சு அழுத்தம் கொண்டிருக்க வேண்டும்; இது போதும்.

போட்டோவுக்காகச் சிரிப்பு

ஹாஸ்யச் சுவை என்பது இயல்பாக அமைய வேண்டிய விவகாரமாதலால், வலிந்து கட்டிக்கொண்டு சிரிக்க வைக்க முயலுவது போட்டோவுக்காகச் சிரித்த மாதிரியாகத்தான் அமையும்.

46