பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மோட்சத்தைக் கொடுப்பது எது?

வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோஷத்தை விட மேலானது.

சுட்டு வச்ச தோசை

அவள் கண்ட நிலா வெண்ணிற நரை. நிறை வெள்ளமென பரந்து கிடக்கவில்லை. ஆனால் சோளப்பொறி மத்தியிலே சுட்டு வச்ச தோசையைப் போலத் தானிருந்தது.

சாப்பாட்டுக் கடை?

சாப்பாடு உயிர் வாழ்வதற்கு அவசியந்தான். ஆனால் வாழ்க்கை வேறு; உயிர் வாழ்தல் வேறு. வாழ்க்கை ஓர் அநுபவம். சிலர் உலகம் முழுவதையுமே சாப்பாட்டு கடையாக மதித்து விடுகிறார்கள்.

சரித்திரமா? புளுகா?

அச்சடித்த புஸ்தகங்களைப் போல் இவர்களுடைய சரித்திரங்களும் கொஞ்சம் அமிதமான புளுகுகள் நிறைந்திருக்கும்.

தர்மம் வெற்றி பெறுமா?

தர்மம் இலக்கியத்தில் மட்டும் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதால் வாழ்வு அப்படியேயாகி விடுமோ?

53

பு.-4