உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

ஞானக் குகை அவன் ஓர் அதிசயப்பிறவி. பிறந்து பத்து வருஷங்கள் வரை ஊமையாகவே இருந்தான். மன்மத ரூபமாக இருந்து என்ன பயன்? வாயிலிருந்து எச்சில் அருவிபோல் வழிந்த வண்ணமாக இருக்கும்.ஆளை விழுங்கும் கரு விழிகள் தான்; ஆனால் உயிரின் சலனம் இருக்காது, பிரகாசம் இருக்காது. வெருகு விழித்த மாதிரி, அறிவு மங்கி விழித் துக்கொண்டிருக்கும் கண்கள். மதுரைச் சீமையில், குறுமலைக்கு அடுத்த சிற்றூரின் தலைமைக்காரத் கையும் ஆளவந்த ஏகபுத்திரன். காசி, ராமேசுவர யாத்தி இவர் மகன். சொத்தையும் செல்வாக் ரைப் பயன் என்பது அவன் தகப்பனார் எண்ணம். குழந்தை பிறந்ததும் தகப்பனாருக்கு மனம் இடிந்து விட்டது. பத்ரகாளியையும் கூசாது எதிர்த்துப் பார்க்கும் அவர் கண்கள் தரையை நோக்கின. ஆகக்கூடி உள்ளூர் ஜோசியனும், வைத்தியனும் இந்த அற்புதமான சிசுவைப் பற்றிச் சொன்னவை கூடப் பொய்த்துவிட்டன. பிறந்தவுடனேயே தாயார் இந்த உலகத்தில் குழந் தைக்குத் தன் இடத்தைக் காலிசெய்து கொடுத்ததினால். அவளைப் பொறுத்த வரை அந்தக் கவலை நீங்கிற்று என்றே சொல்லலாம். தலைமைக்காரத் தேவர் பொறுப் பின் பளு தாங்க முடியாதது. மறவக்குறிச்சிப் பெண்ணைப் பார்த்துக் கலியாணம் செய்துகொண்டிருந்தார். அம்மையாருக்கு ஜாதகப்படி குழந்தை கிடையாது என்ப தைத் தேவருடன் கூடிய ஐந்தாறு வருஷ வாழ்க்கை நிரூ பித்தது. அதில் ஏற்பட்ட பொறாமை இந்த அசட்டுக் குழந்தையின் மீது பாய்ந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை. அந்த