உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14 புதுமைப்பித்தன் கதைகள் அம்சத்திலும், துரைகளின் மனப்போக்கை யுடைய வர்கள். அங்கு போய்க் குடியிருந்தால் இரண்டு விதமான மனப்பான்மைதான் ஏற்படும். ஒன்று அங்கிருக்கும் கறுப்புத் துரைகளுடையது. இரண்டாவது சிறைக்குத் தயாராக்குவது. மூன்றாவதும் ஒன்றிருக்கிறது. அதுதான் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி போடுவது. , தட்டப்பாரையில் தங்கி, பிறகு கப்பலேறி மலைக்கு வருமட்டும், மருதிக்கும் அவள் தாயாருக்கும் என்னவோ பெரிய புதையல் எடுக்கப் போவதாக உற்சாகம். வாட்டர் பாலத்திற்கு வந்தவுடன், அதன் ன் சீதளமான பருவமும், அவர்களுக்குக் கொடுக்கப்பட் டிருக்கும் காறைக் குடிசையும் கவர்ச்சித்தன. இரவில் குளிருக்குப் போர்த்திக்கொள்ளவும். மழையில் தேயிலை பறிக்கும் பொழுது குடையாகத் தலையில் போட்டுக்கொள்ளவும் கம்பளி, வாரத்திற்கு வாரம் கைமேல் காசு! எல்லாம் வெகு சௌகரியமாக இருந்தன. அங்கிருக்கும் நாற்றம் வாசவன்பட்டிச் சேரியின் நாற்றத்தைவிடச் சிறிது அதிகம். அதுவும் சில நாட்களில் பழகிப் போய்விட்டது. குளிரின் கடுமையால். காலை 7- மணிக்குத்தான் திருக்க முடியும். பிறகு கஞ்சியைக் காய்ச்சிக் குடித்து விட்டு. முதுகில் ஒரு கூடையைப் போட்டுக்கொண்டு, தேயிலைக் கொழுந்து பறிக்கச் செல்லுவார்கள். முதலில் பக்கத்திலிருந்தவர்களிடம் கேட்டுப் பழகிக்கொண்டார் கள். ஆரம்பத்தில் இரண்டு மூன்று வாரத்திற்குக் குஷாலாகத்தான் இருந்தது. ஆனால், கூட வேலை செய்யும் பெண் கூலிகளின் பேச்சும் நடத்தையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. . எழுந் மூன்றாவது வாரத்தில் தாய்க் கிழவிக்கு மலைக் காய்ச்சல் வந்தது. ஆஸ்பத்திரிக்குச் சென்று மருந்துத் தண்ணி வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தாள். அவ ளுக்குத் துணையாக மருதியும் போய்விட்டு வருவாள். அப்பொழுது தேயிலை ஸ்டோர் மானேஜர் அவளை ஆஸ்பத்திரியில் கண்டார். 'புது உருப்படி' என்பதால் 'குளித்துவீட்டு வா என்றதின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை. கூலிகளின் சம்பிரதாயத்தைப் அவர்