உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

ஞானக் குகை வும் இருக்கலாம். ஆனால், அறிவு. இருண்டுவிட்டால். பயம் என்பதே போகிறது? 141 சலனம் இல்லாது ஏன் தோற்றப் சென்று இரண்டு பையன் இருண்ட குகைக்குள் சிரங்கை ஜலம் வாரிக் குடித்தான். என்ன தோன்றிற்றோ அந்த இருளுண்ட அறிவிற்கு? தண்ணீரில் குதித்து நீந்த ஆரம்பித்தான். அரைமணி நேரம் கழிந்தது. ஜில்லென்ற நீர் உடலை நடுக்க ஆரம்பித்தது. கரையில் வந்து, ஒரு பாறைமீது வெய்யில் படும்படியான இடத்தில். மரத்துக் கிளைகளைப் பார்த்துக் கொண்டே உடகார்ந் திருந்தான். எவ்வளவு நேரம் சென்றதோ? இருண்ட குகைக்குள்ளிருந்து திடீரென்று ஒரு வெளிச் சம் தோன்றியது. அது மெல்ல மெல்லப் பரந்து, இருண்ட குகையிலும், அதனடியில் சிறிது அலையிட்டுக் கொண் டிருக்கும். ஜலத்திலும் மின்னியது. அதன்பின் திவ்விய மான வாசனை குகை முழுவதும் பரவியது. இந்த அசட்டுப் பிள்ளைக்கு அது அற்புதமாகத் தோன்றியதோ என்னமோ-அது வேடிக்கையாக இருங் தது என்பதில் தடையில்லை. வெளிச்சத்தை நோக்கிச் சிரித்துக்கொண்டே இருந்தான். வெளிச்சம் அதிகமாகப் பரவியது. ஆளை மயக்கும்படி அதிகரித்தது. அச்சமயத்தில் குகையின் உள் மூலையி லிருந்து ஓர் உருவம் நடந்து வர ஆரம்பித்தது உருவம் மிகவும் குள்ளமாக இருந்தாலும், வயதை மதிக்க முடியாத படி இருந்தது. குழந்தையின் முகம்; அதில் பொன்னிற மான தாடி, இடையில் ஒரு லங்கோடு. கண்கள் கறுத்து குகையின் நீர்போல் புரண்டு பிரகாசித்தன. அந்த உருவம் இயற்கை விதிகளுக்குப் புறம்பானது போல் ஜலத்தின் மேல் நடந்து வர ஆரம்பித்தது. அப்பொழுதும் இந்த ஊமைப் பிள்ளைக்குப் பயம் தோன்றவில்லை; ஆச்சரியம் தோன்றவில்லை. அந்தத் தவ உருவம் குகையின் வாசலை நெருங்கியதும் இந்த அசட்டுக் குழந்தை பேசாமல் அவர் பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தது.