உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

கொன்ற சிரிப்பு - சோழ சாம்ராஜ்யத்தின் கடைசி உயிர்ப்பு. அந்தகன் என்ற சோழன் பழைய வீர வம்சத்தின் கனவுகளை யெல்லாம் பாழாக்கி - படாடோபத்திற்கும் வீண் மிடுக் கிற்கும் மட்டும் குறையவில்லை - பொம்மை யரசனாக அந்த வீரர்களின் சிங்காதனத்தை அபசாரம் செய்துகொண் டிருக்கிறான். தெற்கே பாண்டியர்கள் இவன் நாடுகளைக் கபளீகரித்துவிட்டனர். மேற்கே சேரர்கள். அவர்கள் எந்த நிமிஷத்தில் இவன் சிங்காதனத்தையே காலி செய்து விடுவார்களோ! வடக்கே, அம்மம்ம! எத்தனையோ பெயர் தெரியாத அரசர்கள்! அவர்களில் புதிதாக என்னமோ மிலேச்சராம், துருக்கராம். இன்னும் எத்தனையோ பேர்! அந்தகன், மனிதன் தனக்கு நித்திய வாழ்வு என்று மன பால் குடிப்பதுபோல், கவலையின்றி அரசாண்டு கொண் டிருக்கிறான். அதுவும், சம்பிரதாயமாக அவன் ஆட்சி செய்துகொண்டிருப்பதாகப் பாவனை தான்... ப் w? மருதனூர் என்பது ஒரு சிறு கிராமம். இயற்கையின் எழில் கொழிக்கும் ஒரு தனி... என்ன சொல்லுவது. வனப்பை வருணிக்க அந்தக் கிராமத்தின் தவப் புதல்வன். அந்த இயற்கை யன்னையின் தாய்ப்பால் பருகிய கானப் பிரியன்தான் பாடவேண்டும். என்னால் கூற முடியுமா? அவன் அங்கு யாருக்குப் பிறந்தான் என்று ஊராருக்குத் தெரியாது. ஒரு நாள் இரவு குழந்தை யொன்று காளிதேவியின் கோயில் வாசலில் தாயை நோக்கி அழுதது. எந்தத் தாயை நோக்கியோ. அந்தத் தேவிதான் அருளினாளோ என்னவோ! அதிலிருந்து காளி கோயில் பூசாரி எடுத்து வளர்த்தான். காளியின் புத்திரன், பூசாரியின் வளர்ப்புப் பிள்ளை... இதுதான் கானப்பிரியனின் இளமைச் சரிதம்.