உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

208 புதுமைப்பித்தன் கதைகள் கும்மிருட்டு. பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்தி ரன் வரவேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்து கொண்டால், முனிசிபாலிடி என்ன செய்யமுடியும்? எப்பொழுதும் போல் இரைச்சல்தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாய் விட்டது. திரும்பி வருகிறாள். சந்தின் பக்கத்தில் ஒருவன்,- அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் 'கண்' வைத்திருந்தவன். இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம், புருஷ னுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்! என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே? இதுதான் ஐயா. பொன்னகரம்!