உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

துன்பக் கேணி 25 மனசில் ஏதோ பாரம் நீங்கியது மாதிரி இருந்தது. அவளை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. மருதிக்குத் திடீரென்று குத்திருமல் மல்லு மல் லென்று வந்துவிட்டது. கீழே துப்பினாள்; அதில் இரண்டு துளி இரத்தம் கலந்திருந்தது. 44

. யார...? VIII ஏ மூதி/ புல்லுக்கட்டு என்ன விலை?" ஆறணாச்சாமி! எடுக்கறதுன்னா எடுங்க..." ஒரே விலையாச் சொல்லு...' ஒரே வெலேதான். ஆரணா! எங்கனே தூக்கி அங்கே நிற்பவன் டவாலிச் சேவகன். பாளையங் கோட்டை சப் ரிஜிஸ்திரார் சேவகன். எதிரே நிற்பவள் மருதி. வாசவன்பட்டியில் அவள் கனவு கண்ட சந்தோ ஷத்தைப் பாளையங்கோட்டையில் பெற முயற்சிக்கிறாள். மருதி வந்ததும் சென்றதும் வாசவன்பட்டியினருக்குத் தெரியாது. பாளையங்கோட்டையில் ஆஸ்பத்திரி இருக் கிறது, மருந்துத் தண்ணி வாங்கிக் குடித்துக்கொள்ள. ஏதோ கூலி கிடையாமலா போய்விடும் என்ற தைரியம் அவளுக்கு. பகலில் புல் வெட்டி விற்பது. கிடைக்கும் காசு அன் றைய வயிற்றுப்பாட்டிற்குப் போதும். தாமிரவர்ணித் தண்ணீர் விசேஷத்தினாலோ என்னவோ, நோயின் கொடு மைகள், அதாவது வெளித்தோன்றிய புண்கள், உள்ளடங் கின. மேலெல்லாம் மேக நீரின் மினுமினுப்பும் கறுப்புத் தடங்களும் இருந்தாலும், மருதி அவ்வளவு மோசமாகி விடவில்லை. சப் ரிஜிஸ்திரார் வீட்டில் வாடிக்கையாகப் புல் கொண்டு வந்து போடுவதாக ஒப்புக்கொண்டாள். வாடிக் கையாகப் போடுவதாலும், அன்றாடம் கைமேல் காசு கிடைப்பதாலும், நான்கணா போதும் என்று பட்டது.