உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92 புதுமைப்பித்தன் கதைகள் "இந்தப் பயல் ஒரே பிடிவாதமாக 'நெசத்துக்குத் தான் கேட்டேன்!' என்றானாம்.அன்றைக்கு நல்ல உதை. இந்த சமாசாரம் மருதவேளாருக்கு எட்டிற்று. கோயி லுக்கு நூறு தேங்காய் அபராதம்' கொடுப்பதாகச் சொல்லிப் பையனை மீட்டு வந்தார். மண் ஆனால் மறுநாளைக்கு கசமுத்து வேளார் எடுக்கப்போன சமயம், இவன் அவர் வீட்டுக்குள் போய்ப் பெண்ணுக்கு *அடுக்களைத் தாலி கட்டிவிட்டான். ம் "ஊரில் ரகளைதான். 'கலியாணம் என்னமோ ஆச்சு'! என்று இரண்டு சம்பந்திகளும் கூடிக்கொண்டால்... கொஞ்ச நாள் ஊர்க்காரருக்கு நன்றாகப் பேசிக்கொண் டிருக்க விஷயம் கிடைத்ததுதான் மிச்சம். 'இரண்டு சிறுசுகளும் புதுக் குடித்தனம் செய்தன. "கொஞ்ச நாள் வரைக்கும் சுப்பு ஒழுங்காக வீட்டுக் காரியங்களைக் கவனித்து வந்தான். பானை வனைகிறது. சுடுகிறது - இதிலெல்லாம் ரொம்ப ஜோர்... அப்பத்தான் கும்பினியானும் கட்ட பொம்முவும் முட்டிக்கிற சமயம் - கும்பினிக்காரன் 'துபாஷ்' யாரோ பட்டணத்து முதலியார். அந்த வட்டாரத்திலே அவருக்குக் கொஞ்சம் சொற் சக்தியுண்டு. அவரும் குட்டந்தீர்த்த துறையிலேதான் குடியிருந்தார். "ஒரு நாள் சுப்பு மண்வெட்டப் போனதிலிருந்து பிடித்தது வினை. "ஏதோ ஒரு இடத்திலே வெள்ளைக் களிமண் அகப் பட்டது. பயல் வண்டி நிறைய வாரிக்கொண்டு வந்தான். ஆனால் பழைய பொம்மை செய்கிற வெறி வந்துவிட்டது. அதற்கப்புறம் சக்கரத்தைச் சீந்துவதில்லை. அந்தச் சமயத்தில்தான் அவன் மனைவிக்கு நாலு மாசம் கர்ப்பம். வீட்டில் கிடைத்ததைச் சாப்பிடுகிறது, பொம்மை செய் கிறது. அழிக்கிறது. மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது. மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது- இப்படியே -

நாட அந்தரங்கமாகச் சென்று தாலி கட்டுவது; கந்தர்வ விவா கத்திற்குச் சமமான பழக்கம்.