வயிற்றுக்கில்லாமல் உயிர் வாழ முடியுமா?
தெருவிளக்கு அவன் தோழன்தான். அதன் வெளிச்சம் அவனுக்கு எவ்வளவு மன நிம்மதியை அளித்தது.
அன்று சாயங்காலம் வந்தான்.
வெறும் குழி ஒன்றுதான் இருந்தது.
இருள்! இருள்!!
பற்றுக்கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை!
அன்று அவனுக்கு உலகம் சூனியமாய், பாழ்வெளியாய், அர்த்த மற்றதாய் இருந்தது.
சாந்தி?
அது எங்கிருந்து வரும்!
உடைந்த தெரு விளக்குத்தான்! அனால், கொஞ்சமாவது அவனைத் தேற்றிவந்ததே!
வெளிச்சமில்லாவிட்டாலும் ஸ்பரிசித்துப் பார்த்து ஆறுதலடைய வெறுங் கல்லாவது இருந்ததே?
மறுநாள் காலை கிழவனின் சவம் அங்கு கிடந்ததைக் கண்டார்கள்.
❍❍
இப்பொழுது ஒரு புது விளக்கு!
மின்சார விளக்கு!
அதன் கிழே குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குப் பழைய விளக்கையும் பழைய கிழவனையும் பற்றிக் கவலை என்ன?
ஒரு காலத்தில் இவர்களும் அப்படித்தான் ஆவார்கள்!
அதற்கென்ன?
எங்கும், எப்பொழுதும் அப்படித்தான்.
பழையன கழியும், புதியன வரும்.
இது உலக இயற்கையாம்!
ஊழியன், 24.8.1934
130
தெரு விளக்கு