இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பட்!...
விரல்களும் இரத்தமும் ஆற்றில் கலந்து மறைகின்றன.
என்ன குதூஹலம்!
இரண்டும் அண்ணாந்துகொண்டு ஒரு எக்காளச் சிரிப்பு; தேவியின் புன்னகையுடன் கலக்கிறது.
"ஐயோ! தேவி"
பாதத்தில் மண்ணோடு மண்ணாய் விழுகின்றன. தேவி தன் மலர்க்கைகளால் அருள் புரிகிறாள்.
மின்வெட்டுப்போல் தேவி கோவிலுள் மறைகிறாள். குனிந்து வணக்கமாகத் தொடருகின்ற இரண்டு குற்றவாளிகள்...
பழைய தீபவொளி தழுவி முயங்கும் கற்சிலை.
பழைய கோவில்.
பழைய அந்தகாரம்.
மணிக்கொடி, 10.6.1934
88
காளி கோவில்