பக்கம்:புது மெருகு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிப் பெருமை

57

பிறந்தவர்களுக்கு மிகவும் எளிதான காரியமென்பதைப் பாரும்' என்று சிறந்த பலமுடைய நீ இன்று புலப்படுத்தினாய். நான்தான் தவறு செய்தவன். நீ தீர்க்காயுள் பெற்று வாழ்வாயாக! பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரி எக்கரிட்ட மணலைக் காட்டிலும் பல காலம் வாழ்வாயாக! (புறநா.43).

இந்தக் கருத்து அமைந்த பாட்டு அவர் உள்ளங் குழைந்து வெளிவந்தது. மாவளத்தான் சிறிது தலை நிமிர்ந்தான். 'இனி வட்டாடுதலை விளையாட்டிற்கும் செய்யேன்' என்று கூறும்போதே அவன் கண்களில் நீர் துளித்தது. தாமப்பல்கண்ணனார் கண்களிலோ வெள்ளம் பாய்ந்து அதனை வரவேற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/62&oldid=1549147" இலிருந்து மீள்விக்கப்பட்டது