உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புது வெளிச்சம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிருகதாருண்ய உபநிசத்து மேலும் அதைத் தெளிவு செய்கிறது. “மோச்சத்துக்கு அவித்தைதான் பிரதிபந்தமே தவிர வேறு பிரதிபந்தமில்லை ஆகையால் எவனொருவன் இந்த உலகத்திலேயே அந்தச் சிரேஷ்டமான பிரம்மத்தை நான் தான் என்று சாச்சாத்கரிக்கிறானோ அவன் வேறு கதியை அடைகிறதில்லை. தேவதைகள் கூட பிரம்மத்தை அடையும் விசயத்தில் அவனுக்கு விக்கினம் செய்ய முடியாது. தேவதைகளுக்கும் இவனே ஆத்மாவாயிருக்கிறான். ஆகையால் பிரம்மத்தை அறிபவன் பிரம்மமாகிறான்” என்கிறது.

அறிவார்ந்த நண்பனே! சிந்தித்துப்பார். சரியான வழிக்குவா! மற்றவர்களுக்கும் விளக்கிக் கூறு. துன்பத்திலிருந்து தேசத்தை விடுவிப்பதில் சதா காலமும் ஈடுபடு. சத்தியமே வெல்லும் வாழ்க தமிழ்நாடு.



* ஒவ்வொரு வீட்டிற்கும் விளக்கு எப்படியோ அப்படியே புத்தகமும் அவசியம் என்பதை நம்மவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

- பீ.வி. ஜுக்

இன்று மனிதனுக்கு மிக மிக அவசியமானது நாய்களைத் தவிர ஒரு குப்பை கூடையும் தான்.

திருக்குறளையும், புறநானூற்றையும் கற்றுத் தெளிந்து வாழ்வில் கடைபிடிக்காத ஒருவன், தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும்.

-வெ.

புது வெளிச்சம்

91