பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

132 / புத்தரின் வரலாறு

தசசீலம் (பத்து ஒழுக்கம்)

பௌத்தரில் இல்லறத்தார் பஞ்ச (ஐந்து) சீலங்களை மேற்கொள்ள வேண்டும். துறவறந்தார் தச (பத்து) சீலங்களை மேற்கொள்ள வேண்டும். சீலத்தைச் சிக்காபதம் என்றும் கூறுவர். தச சீலத்திலே பஞ்ச சீலங்களும் அடங்கியுள்ளன. இல்லறத்தார் பஞ்ச சீலங்களையும் துறவறத்தார் தச சீலங்களையும் தினந்தோறும் ஓதவேண்டும். தச சீலத்தின் பாலி மொழி வாசகம் இது:

1. பானாதி பாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

2. அதின்னாதானா வேரமணி ஷிக்காபதம் ஸமாதியாமி

3. அஹ்ப்ரஹ்மசரியா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

4. மூஸாவாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

5. ஸுராமோய மஜ்ஜப மாதட்டாணா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

6. விகால போஜனா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

7,8,9. நச்சகீத வாதித விலரக்க தஸ்ஸனமால கந்த விவப்பண தாரணமண்டன விபூஷணட்டானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

10. உட்சாசயன மஹாசயன வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

இதன் பொருள் வருமாறு: