பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 143

கைந்நாகத் தார்க்காழி கைகொண் டளித்தனையே
பைந்நாகர் குலமுய்ய வாயமிழ்தம் பகர்ந்தனையே!
இரந்தேற்ற படையரக்கர்க் கிழிகுருதி பொழிந்தனையே!
பரந்தேற்ற மற்றவர்க்கு படருநெறி மொழிந்தனையே!

எனவாங்கு

(சுரிதகம்)



அருள்வீற் றிருந்த திருநிழற் போதி
முழுதுணர் முனிவநிற் பரவுதும் தொழுதக
ஒருமன மெய்தி இருவினைப் பிணிவிட
முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்து
ஓங்குநீர் உலகிடை யாவரும்
நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே