பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 / புத்தரின் வரலாறு

நமது நாட்டிலே இராமாயணம், பாரதம், புராணங்கள் முதலிய சமய சம்பந்தமான கதைகள், மத சம்பிரதாய முறையில் எழுதப்பட்டு, அநேக அற்புதங்களும் புதுமைகளும் தெய்வீகச் செயல்களும் நிரம்பியவனவாகவுள்ளன. இவைகளைப் பக்தியோடு மக்கள் படித்து வருகிறார்கள் உவதத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் (நபி நாயகம், ஏசு கிறிஸ்து முதலிய சமயத் தலைவர்கள் உட்பட) தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன. பகவன் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாயமுறையில் பார்க்கும்போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்களையும் கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சிரித்திரங்கள், அந்த அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பௌத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப்பெறுவது இல்லை.

இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்த சரித்திரம் எழுதப்பட்டது. ஆயினும் இது விரிவான நூல்--என்று கூறுவதற்கில்லை. சில செய்திகள் விரிவஞ்சி விடப்பட்டன. ஆயினும் முக்கியமான வரலாறுகள் விடாமல் கூறப்படுகின்றன.

பெளத்த சமயத்தின் தத்துவமாகிய நான்கு வாய்மைகளும் அஷ்டாங்க மார்க்கங்களும் பன்னிரு நிதானங்களும் இந்நூலுள் காட்டப்பட்டுள்ளது. பெத்த மதத் தத்துவத்தை ஆழ்ந்து கற்பவருக்கு இவை சிறிதளவு பயன்படக்கூடும். இந்நூலின் இறுதியில் பின் ணைப்பாகத் திரிசரணம், தசசீலம், திரிபிடக அமைப்பு ஆகிய இவைகள் விளக்கப்படுகின்றன. பழந் தமிழ் நூல்களிலே சிதறிக் கிடக்கிற புத்தர் புகழ்ப்பாக்கள், முக்கியமாக வீரசோழிய உரை மேற்கோளில் காட்டப்பட்ட புத்தர் புகழ்ப்பாக்கள், தொகுக்கப்பட்டு இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய இனிய இப்புகழ்ப்பாக்கள் வாசகர்களுக்கு இன்பம் பயக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இங்ஙனம்
மயிலை சீனி. வேங்கடசாமி