பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் நெய்யைத் தன்னிடத்தே கொண்ட, நிணமும் தசையும் மிகுதியாகக் கூட்டி ஆக்கின, பொரிக்கறியை உடைத்தான சோற்றைப், பிறர் அருந்துக, அழகிய தளிரையுடைய கீரையாகிய இலைக்கறியையே அருந்தினாலும், எமது கணவன் எமக்கு அருளும் அதுவே, எமக்கு நுகர்தற்கு இனிதாயிருக்கும். குய்தாளிதம்.கணவன் அருளுதலைப்பெற்றால் கீரை அடகு மிசையினும் இனிது எனக் கற்பின் மிகுதியால் உரைத்த இயல்பு கூறப்பட்டது. 44. கற்பு முல்லை-2 மேவரும் கணவன் தணப்பத் தன்வயின் காவல் கூறினும் அத்துறை யாகும். பொருந்துதல் வந்த கணவன் தன்னை விட்டு நீங்கினனாக, மனைவி, தன்னிடத்து அமைந்த காவலைச் சொல்லினும், அது கற்புமுல்லை ஆகும். - மெளவல் விரியும் மணங்கமழ் மான்மாலைத் தெளவல் முதுகுரம்பைத் தான்றமியள்-செவ்வன் இறைகாக்கும் இவ்வுலகில் இற்பிறந்த நல்லாள் . . நிறைகாப்ப வைகும் நிறை. - 283 செவ்விதாக மன்னவன் காத்துவருகின்ற இந்த உலகினிடத்தே, நற்குடியிலே பிறந்த நற்பண்பினை உடையாள், முல்லைமலராநின்ற மணங்கமழும் மயக்கத்தையுடைய மாலைப் பொழுதிலே, அழிந்த பழங்கூரையினைக் கொண்டகுடிலிடத்தே, தான் தனியளாகவே இருக்கின்றனள்; எனினும் காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கமாகிய நிறையுடைமை காத்தலினாலே, அவளுடைய கற்பும் நிலைபெறா நின்றது. - ചെണഖ്-ഗ്രഞ്ഞെ. தெளவல்-அழிந்த கற்புத் தன்மையது மிகுதி இவ்வாறு கூறப்பட்டது. . . . 45. கற்பு முல்லை-3 திருவளர்நன்னகர் அடைந்த கொழுநன் பெருவளம் ஏத்தினும் அத்துறை ஆகும். - * - செல்வம் பெருகும் அழகிய மாளிகையிலே சேர்ந்த கணவனது பெரிய செல்வத்தினை, மனைவி வாழ்த்தினாலும், அது கற்புமுல்லைத் துறை ஆகும். - ஊழிதோறுழி தொழப்பட்டுலைவின்றி ஆழிசூழ் வையத் தகமலிய-வாழி கருவரை மார்பினெங் காதலன் நல்க - வருவிருந்தோம்பும் வளம். ... 284