பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் அழகிய ஆபரணங்களையுடைய மறக்குடி மகளிர், தம் கணவன்மார் மேற்கொண்ட தொழிலானது நன்றாகி முடிவெய்துமாறு, வேன்மகனாகிய பூசாரியோடுங் கூடி வெறியாடலை நிகழ்த்துவது, வெறியாட்டு ஆகும். இதனை வள்ளிக்கூத்து எனவும் உரைப்பர். - காணில் அரனும் களிக்கும் கழன்மறவன் - பூணிலங்கு மென்முலைப் போதரிக்கண் - வாணுதல் தான்முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறந்திளைப்ப வேன்முருகற் காடும் வெறி. 21 வீரக்கழல் அணிந்தோனாகிய மறவனுடைய, ஆபரணம் விளங்கும், மென்மையான முலைகளையும், செவ்வரி பரந்த கண்களையும், ஒளிகொண்ட நெற்றியினையும் உடைய மனைவியானவள், தான், முருகக் கடவுளின் கோலத்தைத் தன் உடலிடத்தே நிறுத்தியவளாக, மாலைகள் பக்கத்தே அசையும் படியாக, வேற்படை யுடையோனாகிய முருகப்பிரானுக்கு ஆடாநின்ற வள்ளிக்கூத்தினைக் காண்பானாயின், கூத்தப் பிரானாகிய அரனும் களிப்பினை அடைவானே! முருகு மெய்ந்நிறீஇ - முருகப்பிரானை உடலிடத்தே நிலை பெறுத்திவேல் முருகற்கு ஆடும் வெறிநோக்கி அரனும் களிக்கும்’ என்றது. அழித்தற் கடவுளான அவன் பகைப் புலத்தார் அழியக் கருணை செய்வான் என்றதாம். பொதுவாக வேலன் ஆடுதலே பெரும்பான்மை வழக்கமாம்; சிறுபான்மை சிறப்பறியா மகளிர் ஆடுதலும் நிகழும்; அவ் வகையுள் ஒன்று இது. - வேலனாடுதல் அகத்திணைக்கே சிறப்பு; மேலும், அது வேத்தியலின் வழுவித் தன்னுறு தொழிலாகப் புறத்திணைக் கண் அமைதலின், வழுவெனக் கொள்வர் தொல்காப்பியர். - தொகுத்து உரைத்தல் இவ்வாறு சொல்லப்பட்ட முறைமையானே, வெட்சித் திணையானது, வெட்சியரவம் முதலாகிய பத்தொன்பது துறைகளொடும் பொருந்தி நிகழ்தல் இயல்பாம் என்பது விளங்கும். அவை, படையியங்கும் அரவம் நிகழ்தலும், நன்னிமித்தமாகிய விரிச்சி கேட்டலும், கானங் கடந்து செல்லும் செலவும், ஒற்றரால் பகையரணின் வலியை ஒற்றியறியும் வேயும், பகையரணை வளைத்துக் கோடலாகிய புறத்திறையும், பகையரணிற் காவலன் மறவரை அழித்தலாகிய ஊர்கொலையும், பகைவரது ஆநிரைகளைக் கைக்கொள்ளலாகிய ஆகோளும், கொண்டு செல்லுமிடத்துப் பின்தொடர்ந்து வந்தாரான