பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முல்லைப் பொதுவியற்படலம் 283. இதுவுமது மேவருங் கணவன் றணப்பத் தன்வயின் காவல் கூறினு மத்துறை யாகும். 179 இ-ள். பொருந்துதல் வந்த கொழுநன் நீங்கத் தன்னிடத்துக் காவலைச் சொல்வினும் முற்பட்ட துறையேயாம் எ-று. வ -று. மௌவல் விரியு மணங்கமழ் மான்மாலைத் தௌவன் முதுகுரம்பைத் தான்றமியள்- செவ்வன் இறைகாக்கு மிவ்வுலகி னிற்பிறந்த நல்லாள் நிறைகாப்ப வைகு நிறை. இ-ள். மளவல் மெலரும் மணநாறும் மயக்கத்தினை உடைய மாலைக் காலத்து அழித்த பழங்கூரையிடத்துத் தான் தனியொருத்தி செவ்விதாக இறைவன் காவல் போற்றும் இந்நிலத்திடத்துக் குடிப் பிறந்த நல்லவளுடைய காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கமாகிய நிறை, பரிகரிப்பத் தங்கும் நிறையானது எ - று. (9) 284. இதுவுமது திருவளர் நன்னக ரடைந்த கொழுநன் பெருவள மேத்தினு மத்துறை யாகும். இ-ள். செல்வம் பெருகும் அழகிய மாளிகையிலே சேர்ந்தகண வன் தன் பெரிய செல்வத்தை வாழ்த்தினும் முற்பட்ட துறையே யாம் எ - று. வ-று. ஊழிதோ றூழி தொழப்பட் டுலைவின்றி ஆழிசூழ் வையத் தகமலிய - வாழி கருவரை மார்பினெங் காதல னல்க வருவிருந் தோம்பும் வளம். இ-ள். நெடுங்காலந்தோறும் நெடுங்காலந்தோறும் வணங்கப் பட்டுக் கேடின்றிக் கடல் சூழ்ந்த பாரகம் பெருக வாழ்வதாக! வலிய