5. தசரதன் தன்மை
ஒட்டிய பகைளுர்வங் துருத்த போரிடைப் பட்டவர் : அல்லரேல், பரம ஞானம் போய்த் தெட்டவர் : அல்லரேல், செல்வ மீண்டென விட்டவர் ; அல்லரேல், யாவர் வீடுளார் ?
இறப்பெனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் மறப்பெனும் அதனின்மேல் கேடு மற்றுண்டோ ? துறப்பெனும் தெப்பமே துணைசெய் யாவிடில் பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்க லாகுமோ ?
அருஞ்சிறப் பமைவரும் துறவும் அவ்வழி தெரிஞ்சுற வெனமிகுங் தெளிவும் ஆய்வரும் பெருஞ்சிறை யுளவெனில் பிறவி என்னுமிவ் இருஞ்சிறை கடத்தலின் இனியது யாவதே ?
இனியது போலுமிவ் அரசை எண்னுமோ துனிவரு நலனெனத் தொடர்ந்து தோற்கலா கனிவரும் பெரும்பகை நவையின் நீங்கியத் தனியர சாட்சியில் தாழும் உள்ளமே.
உம்மையான் உடைமையின் உலகம் யாவையும் செம்மையின் ஒம்பிகல் லறமும் செய்தனென் இம்மையின் உதவில் லிசைகடாய நீர் அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால்.
இழைத்ததி வினேயையும் கடக்க எண் ணுதல் தழைத்தபே ரருளுடைத் தவத்தி குைமேல் குழைத்ததோர் அமிர்தினேக் கோடல் நீக்கிவேறு அழைத்ததி விடத்தினே அருந்த லாகுமோ ?
கச்சையங் கடகரிக் கழுத்தின் கண்ணுறப் பிச்சமும் கவிகையும் பெய்யும் இன்னிழல் நிச்சயம் அன்றெனில் கெடிது நாளுண்ட எச்சிலை நுகருவ தின்பம் ஆகுமோ ?
மைந்தரை இன்மையின் வரம்பில் காலமும் நொந்தனன் : இராமன்னன் ைேவை நீக்குவான் வந்தனன் : இனியவன் வருந்த யான் பிழைத்து உய்ந்தனன் போவதோர் உறுதி எண்ணினேன்.
437
( 3 )
(4)
(5)
(6)
(8)
(9)
(10)