உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3951 աո*ւ cք*-հա மூன்றும் உடல் உறுப்புகள். மவுலி கலை யணி. வாள் தெய்வீகமான ஆயுதம். வீரம் உயிரின் குணமாப் உறுதி கொண்டுள்ளது. வைப்பு முறை வரிசை உரிமைகளை மருவி வந்தன. நேரே போர் ஏற்றது மார்பும் கோளும் ஆக லால் அவை சீர் ஏற்று முக்திச் சிறப்பு உந்தி நின்றன. சங்கரன் கொடுத்த வாள் என்றது அதன் அம்புத கிலேயை அறிய வந்தது. இராவன லுடைய தவத்தையும் வீரப்பிரதாபத்தையும் வியந்து சிவபெரு மான் ஒரு அதிசயமான வாளே அவனுக்குக் கொடுத்தார். அதற் குச் சந்திரகாசம் என்று பேர். எந்த ஆயுதங்களும் அதனைத் கடை செய்யமுடியா; எவரையும் வெல்லவல்லது; தன் உயிர்க்கு ஆபத்து நேரும்போதுதான் அதனை உரிமையோடு உபயோகிக் கலாம். அந்த அரிய வாள் உடை வாளாக அவனிடம் மருவி யிருந்தது. அன்று அதனை எடுக்கவே இல்லை. எதிரி கிட்ட நெருங்காமல் எட்ட கின்றே அம்புகளைத் கொடுத்து யாவும்.அகம் செய்து தொலைத்தான் ஆதலால் அந்த வாளைக் கொண்டு வேலை செய்ய இயலாது போயது. என்றும் காணுத அபசயம் விரைந்து கண்டமையால் வெருண்டு மருண்டு மயங்கி கின்ருன். - சங்கார கருத்தாவாகிய சங்கரன் கொடுத்தவாள் இருந்தும் அங்கு ஒன்றும் செய்ய முடியாமல் ஊனமடைந்து போனன்; ஆகவே அது இவ்வாறு உரையாடவந்தது. வி ாமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலக்கை புக்கான். போரில்கலங்கித் தோல்வியாப் ஊருக்குப் போன இலங் கைவேந்தனை இங்ஙனம் துலங்க எழுதி தொகையாச் சுட்டிக் காட்டியிருக்கிளுர். களம்= போர்புரிந்த இடம். - யானே குதிரை தேர் முதலிய நால்வகைச் சேனைகளும் கடல் போல் திரண்டுவர எல்லா ஆயுதங்களோடும் மூண்டு வந்தவன் அன்றுமில்லாமல் மீண்டு போனன் என்றது அங்கே நேர்ந்த அழிவுகளையும் இழவுகளையும் விழி கெரிய விளக்கி நின்றது. களத்தே விட்டு என்று சொல்லியிருக்கலாம்; எதுகை ஈய மும் ஒட்டி யிருக்கும்; அவ்வாறு சொல்லாமல் போட்டு என, து