1784. கம்பன் கலை நிலை மனிதரினும் அாக்கர் மிஞ்சிய வலியினர்; தேவரோடு எதிர்த்துப் போராட வல்லவர்; ஒரளவில் அவர்க்கு கோன நிலையினர்; அந்த மரபில் வந்த ஒரு அரச மங்கை வாயிலாகப் பிராட்டியின் பெருமை இங்கே பேசப் படுகின்றது. தான் கண்ட அதிசய சவுத்தரியத்தை அவள் துதி செய் திருப்பதில் அழகின் அற்புத நிலைமை வெளியா யுள்ளது. அழகிற்கு எல்லை இல்லை என்னும் இவ்வாக்கியம் அறிவின் எல்லை யைக் கடந்து கிற்கின்றது. எல்லை காண முடியாத ஒன்றை எல்லை கண்டு சொல்லியபடியாய் இச் சொல் ஓடிவந்துள்ளது. தான் ஒரு பெண் மகளாயிருந்தும் தன்னையும் அந்த உருவப் பொலிவு பருகிவிட்டதே என்று மறுகி முட்டுகிருள். தன் கண்ணையும் கருத்தையும் பறிகொடுத்து விட்டு வறிய கிலையில் உருகி கின்று அருகே எதையும் நோக்காமல் அலமரு கின்ருள். மது உண்ட வண்டாய் மனம் மயங்கி அயர்த்தது. பெண் பிறந்தேனுக்கு என்றதில் அவள் எண் பிறந்துள் ளமை எளிதறிய வந்தது. இயற்கை கியதியையும் கடந்து பெண் அழகு பெண் உள்ளத்தை மயக்கி யுள்ளது. கண் அளவில் கில் லாமல் கருத்தும் பறிபோயது. விசித்திர கதியில் அழகு இங்கே வேலை செய்திருக்கின்றது. இராமனது உருவ நிலையில் உள்ளம் பறிபோய்க் கண் ஊன்றி நின்றவள் அயலே சீதையைக் கண்டதும் இங்கனம் வியப்பும் விம்மிகமும் கொண்டு மெய்ம் மறந்து கின்ருள். தோளில் காட்டங்கள் ஊன்றினள் பறிக்க ஒர் ஊற்றம் பெற்றிலாள் 1 + நோக்கவே செயல் பிறிதாயினுள். முன் கண்ட காட்சியை மறந்து பின் கண்டதில் பேராவல் மண்டினள். என மாற்றம் பெற்று கின்றவள் அயல் வருவதை அந்த அழகனே மருவில்ை ஒழிய அமுதம் உண்ணினும் உயிர் பிழையாது என மயலேறி கின்றவள் அயலே வந்த அழகிபால் இங்கனம் சிங்தை பறி போயினள் என்ருல், அந்த உருவத்தின் எழில் கலங்களையும் இனிமைப் பண்புகளையும் அருமை பெருமைகளையும் எவ்வாறு உரைகளால் வாைந்து கூற முடியும்: