இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொஞ்சும் அழகு 3.05.
என்ன வேண்டும்? தபால் கார்டு தானே?” o,
ஆமாம்’ என்றான் வியப்புடன்.
கொண்டு வருகிறேன்’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறிவிட்டு அவள் கீழே இறங்கிச் சென்றாள்.
வாழ்க்கையில், ஹரி அநுபவித்த துன்பமே அதிகம். அதற்கு பரிகாரமாகத்தான் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கடவுள் இப்போது சிறிது சிறிதாக அவனுக்கு அளித்து வருகிறார் போலும். ஆனால், அந்த ஆனந்தத்துக்கும் அடித்தளத்தில் ஏதோ ஒரு வேதனை அவன் நெஞ்சை வாட்டியது.
- நான் ஏதாவது தவறு செய்கிறேனா-என்று எண்ணிப் பார்த்தான். உன்னால் முடியாது’ என்று காயத்திரி அவனைப் பார்த்துச் சிரிப்பது போல் தோன்றி யது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தான். அந்த உருவமும், அந்தச் சிரிப்பும் மாறவே இல்லை. மீண்டும் கண்ணைக் கசக்க கையை உயர்த்தினான். காந்தாமணி அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டாள்.
என்ன இது? பகலில் விழித்துக் கொண்டே துரங்குகிறீர்களா? எதிரில் நிற்கிற என்னை எதற்காகக் கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்க்கிறிர்கள்? ஏதாவது கனவு கண்டீர்களா?’
ஹரி அவளுடைய தளிர்க்கரங்களிலிருந்து, தன் கையை மெல்ல விடுவித்துக் கொண்டான்.
கார்டு கொண்டு வந்தாயா காந்தாமணி?'’
“இதோ...’
- பேனாவையும் கொடேன்.
நீங்கள் சொல்லுங்கள்; நான் எழுதுகிறேன் .'