சந்திரோதயம் 417
- நன்றாய்த்தான் இருக்கிறது! குழந்தையைப் பார்ப் பீர்களா; என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!’
குழந்தையைத்தானே பார்த்துக் கொண்டிருக் கிறேன்; நீயும் ஒரு திழந்தைதானே?”
போதும் சங்கீதத்தில் தான் பெரிய வித்துவான்: பேசினால் அசடு வழிகிறது. இந்தாருங்கள், குழந்தை யைப் பாருங்கள்’ என்று சுசீலா குழந்தையை மெல்ல எடுத்து இரு கைகளாலும் நீட்டிக் கொண்டிருந்தாள்.
ஹரி தயங்கினான். எனக்குக் குழந்தையை வாங்கத் தெரியாதே’
‘எனக்கு மட்டும் குழந்தையைப் பெறத் தெரிந்தா பெற்றேன்? இம், பிடியுங்கள்! எல்லாம் பழக வேண் டாமா? உங்கள் பாஷையில் வேண்டுமானால் கூறுகிறேன்! குழந்தையைத் தூக்க இப்போதே சாதகம் செய்யத் துவங்கி விடுங்கள். சுசீலா மெல்லச் சிரித்தாள்.
சிரிப்பா அது? அமுதத்தின் மணமாக மணத்தது ஹரிக்கு.
குழந்தை அழகாயில்லே?”
“பாரிஜாத மரந்தில் பறங்கிப் பூவா பூக்கும்? உன் னையே உரித்துக் கொண்டு பிறந்திருக்கிறான்.’
சுசீலா பூரித்துப்போனாள்.
‘அப்போது, குழந்தை என்னைக் கெண்டா பிறந்திருக் றெது என்கிறீர்கள்? இதுவரைப் பார்த்தவர்கள் எல்லாரும் அப்பாவை போல் -l (3, என்று சொன்னார்களே: எல்லாம் பொய்தானா? கடைசியில் மக்கு என்று சொல்லி வி களே1’
‘| மக்கா?'