உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புள்ளிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுப்பப்படுகின்ற பொருட்கள் எல்லாம் அவர்களுக்குப் போய்ச் சேரும் என்ற நம்பிக்கையும் நமக்கு ஊட்டப்படுகின்றது. அதே நேரத்தில் போன உயிர் இன்னொரு இடத்திலே போய் பிறந்து விட்டது என்கின்ற இன்னொரு நம்பிக்கையும் நமக்கு ஊட்டப்படுகிறது. இந்த இரண்டு நம்பிக்கைகளும் ஒன்றோடொன்று மோதிக் பார்க்கிறோம். வதைப் பிரிந்த உயிர் ஆகாயத்தில் இருக்கிறது. பாவம் செய்த உயிரானால் நரகத்தில் இருக்கிறது. புண்ணியம் செய்த உயிரானால் சொர்க்கத்திலே இருக்கிறது. அந்த உயிருக்கு சாந்தி கிடைப்பதற்காக நாம் இங்கே புரோகிதர்களைக் கொண்டு ஆகவேண்டிய கருமங்களைச் செய்ய வேண்டுமென்பது ஒரு வகை நம்பிக்கை ! ன்ை இல்லை, இல்லை - அந்த உயிர் வேறொரு உடலிலே புகுந்தது. அல்லது வேறொரு உருவெடுத்து விட்டது என்பது இன்னொரு வகையான நம்பிக்கை. இதிலே வருகின்ற முரண்பாடு, நாம் நம்புவதைப் போல இந்த உயிர் இன்னொரு உடலிலே கலந்து இன்னொரு உருவமாக ஆகிவிட்டால், நம்மால் புரோகிதர்கள் வழியாகவோ அல்லது வேறு குருநாதர் வழியாகவோ அனுப்பி வைக்கப்படுகிற பொருள் எல்லாம் எங்கே போகிறது என்ற கேள்வி பிறக்கிறது. உயிர் இருக்கிற வரையிலே மனிதன். உயிர் போய்விட்டால் பெயரே பிணம் என்று மாறுகிறது. அதைப்போலத் தான் உயிர் தனியாக இயங்க முடியாது. உடலிலே இருக்கின்ற பல்வேறு கூறுகள் அத்தனையும் கலந்து தான் உயிர் என்று இருக்கிறதேயல்லாமல் அது தனித்து இயங்குவது அல்ல. - புள்ளி இருக்கவேண்டிய இடத்தில் இருக்கவேண்டும் ! எனவே உயிரும் மெய்யும் இணைந்து இயங்குவதை நம்முடைய எழுத்தின் மூலமாகவே நாம் இன்றைக்குப் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்தப் புள்ளி இருக்க வேண்டிய இடங்களில் இருக்க வேண்டும். இந்தப் புள்ளி, மானுக்கு இருந்தால் அது புள்ளிமான் 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புள்ளிகள்.pdf/13&oldid=1706211" இலிருந்து மீள்விக்கப்பட்டது