பக்கம்:பூமியின் புன்னகை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

59


பணநாயகப் பதவிகளாம் அத்தனையும்
பறிப்பதற்கும் வகிப்பதற்கும் நானறிவேன்

குணநாயகப் பண்பாளர் ஆட்சிவந்தால்
குன்றிவிடும் என் வலிமை என்றென்றும்

எனுமோரகக் கருத்ததனால் தோற்றிடினோ
எங்களவர் கல்லெறிவர் சொல்லெறிவர்.

போடாபோ தேர்தலில் நான் வென்றிடுவேன்
பொல்லாத வேளையினால் நான்தோற்றிடிலோ

சோடாக்கள் கல்லெறிகள் செய்திடுவேன்
சோதாக்கள் ரெளடிகளும் குண்டர்களும்

காடாய்ப் பெருகிவளர்கின்ற கட்சியெங்கள்
கட்சியாகும் என்பதனால் தேர்தலின்பின்

ஏடாஎதிராளீ! நாங்களெல்லாம் தோற்றாலும்
எறிவதற்குக் கற்களுண்டு சோடாவுண்டே!
(மார்ச்-1971)