பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பூர்ணசந்திரோதயம்-3 பலமாக எழுந்தது. அதுவுமன்றி, அந்தப் பெண் செய்த லாகலமும், அதற்குமுன் அம்மாளு, தனம் என்ற இரண்டு பெண்களும் செய்த ஸாகலமும் ஒன்றுபோலவே இருந்தன. அவள் ஒரு வேளை அந்த இரண்டு பெண்களுள் ஒருத்தியாக இருப்பாளோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. ஆனால், இந்தப் பெண்ணின் குரல் மாத்திரம் சிறிதளவு வேறுபட்டுத் தோன்றியது. ஆகையால், அப்படி இருக்காது என்ற எண்ணம் உண்டாயிற்று. அதுவுமன்றி தான் ஒரு மாதகாலமாக அந்தச் சிறையில் இருப்பதால், அவ்வளவு நீண்ட காலம், தனம், அம்மாளு முதலிய பெண்கள் அந்த ஊரில் தாமதித்திருக்கக் காரணமில்லை என்றும், அவர்கள் பூனாதேசத்துக்குப் போயிருக்க வேண்டும் என்றும் ஒரு நினைவு உண்டானது. ஆகையால், இந்தப் பெண் அவர்களைச் சேர்ந்தவளாக இருக்கமாட்டாள் என்ற உறுதி ஏற்பட்டது. அவ்வாறு அவன் இரண்டொரு விநாடி நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபின் அவளை நோக்கி, சரி; இப்போது நீ சொன்னதிலிருந்து எனக்கு ஒரு முக்கியமான விஷயம் நிச்சயமாயிற்று. நீ இதுவரையில் மயங்கிக் கீழே விழப் போனதும், நான் இறுகப் பிடித்துக் கொள்ளாவிட்டால், உடம்பு பறந்து போய் விடும் போல இருக்கிறது என்று சொன்னதும் நிஜமல்ல. என்மேல் துராசை கொண்டு நீ என்னை இப்படிக் கட்டிப்பிடித்துக் கொண்டி ருக்கிறாய் என்பது உன் வாக்குமூல மாகவே வெளிப்பட்டு விட்டது. அன்னிய ஸ்திரீயான உனக்கு ஏதோ அபாயம் நேர்ந்துவிட்டது என்ற எண்ணத்தினால், நான் உன்னைத் தொட்டேனே அன்றி வேறல்ல. வேறு எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் நான் உன்னைத் தொடுவது ஒழுங்கே அல்ல. ஆகையால் இப்போது உன் உடம்பு என் உடம்பில் பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விநாடியிலும் நான் பஞ்சமா பாதகத்துக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறேன் ஆகையால், இதே நிலைமையில் இன்னம் ஒரு நொடி நேரம் கூட இருக்க நான் சகிக்கமாட்டேன். தயை செய்து என்னை விட்டுவிடு. நீ