பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

இன்று போலீஸ் படைகளும், அதன் வசதிகளும், வளர்ச்சிகளும் பெஞ்சமின் அன்று கூறிய அடிப்படைக் கருத்தின்மீது நடைபெற்று வருவதைக் காண்கிறோம். ஆனால், ஒன்று, கூலிப்படை போலீஸ் முறை அவர் நினைத்ததைப் போலவே அகற்றப்பட்டு விட்டது என்ற நிலையை பார்க்கிறோம், இல்லையா?

பெஞ்சமின் ஒரு புத்தகப் பிரியர். புத்தகங்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கும் ஓர் அறிவுப் பெட்டகமாக அமைத்துள்ளது. அதனால் மக்களுக்கு அறிவுரை கூறும் ஏடுகள் சுலபமாக கிடைக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அதுதான் லைப்ரரி என்ற வாசகசாலை என்பதாகும்.

பெஞ்சமின், ஜண்டோ என்ற ஒரு நண்பர்கள் கழகத்தை ஆரம்பித்தார், அவரவர்களிடம் உள்ள ஏராளமான புத்தகங்களை கற்க விரும்புபவர்களுக்கு இரவலாக, கொடுத்து வாங்கப்பட்டன. அவரவர் பெற்றவற்றைப் படித்து முடிக்கும்வரை புத்தகங்கள் சுற்றுலா வருவது வழக்கமாக இருந்தது. அதற்குப் பிறகு, வாசிப்பவர்கள் புதுப்புது புத்தகங்களைப் படிக்க விரும்புவார்கள்.

இந்த புத்தகங்களை வாங்குவதற்கு ஜண்டோ சங்க அங்கத்தினர்கள் குறிப்பிட்ட தொகையைச் சந்தவாக செலுத்த வேண்டும் என்று பெஞ்சமின் யோசனை கூறி, அதையே ஒரு விதியாகவும் உகுவாக்கினார். இவ்வாறாக, அந்த சங்கத்திலே உள்ளவர்கள் செலுத்திய பணத்தில் புத்தகம் வெளியீட்டாளர்களுக்கு அனுப்பி வெவ்வேறு புதிய புத்தகங்களை வரவழைக்கலாம்.

அவ்வாறு வந்த புத்தகங்களை ஜண்டோ சங்கத்தில் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கலாம். உள்ள புத்தகங்களில் யார் யாருக்கு எது தேவையோ அவற்றை அங்கேயே படிக்கலாம். உறுப்பினர்கள் மட்டுமே புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்ற விதி முறைகளை வகுத்துக்கொடுத்தார் பெஞ்சமின்.