பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிப்பு எழுதிக் கொடுத்தால் மறுநாளே விட்டுவிடுவோம் என்று ஆசை வார்த்தை காண்பித்துப் பலரிடம் மன்னிப்பு எழுதி வாங்கினார்கள். அவ்வாறு மன்னிப்பு எழுதி வாங்கியது ஒருவருக்கொருவர் ரகசியமாக இருந்தது. திடீரென்று ஒரு நாள் சுதேசமித்திரன்' பத்திரிக்கையில் மன்னிப்பு எழுதிக் கொடுத்தவர்களின் பட்டியலைப் பார்த்தேன். எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாகவும், குழப்பமாகவும் இருந்தது. மன்னிப்பு எழுதிக் கொடுக்காதவர்களில் சிலர் ஏழைத் தொண்டர்கள் என்னிடம் வந்து நாங்களும் எழுதிக் கொடுக்கிறோம் என்று அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்குச் சரியாகவே பதில் சொன்னேன். இதுவரை எழுதி க் கொடுத்தவர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு, உங்களால் சிறைக்கொடுமை தாங்க் முடியாதுபோல்ை நீங்கள் தாராளமாக எழுதிக் கொடுங்கள்-என்று நான் அவர் களிடத்தில் சொன்னேன். மன்னிப்பு எழுதிக் கொடுத்தவர்கள் விடுதலை செய்யப்படாததால் மதுரைச் சிறையில் மன்னிப்பு எழுதிக் கொடுப்பது நின்று விட்டது.

78