அரசின் அடக்கு முறை
105
ஆட்சியின் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் போக்கு எந்த அளவிற்கு இருந்தது?
3-3-1935 அன்று வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்ட ஈ.வெ. கிருஷ்ணசாமியை, ஜாமீனில் விடவும் மறுக்கும் அளவு பழி வாங்கும் போக்கு இருந்தது. அவர் மேல் சாட்டப்பட்ட குற்றம் என்ன? அரச வெறுப்பைத் தூண்டினார். அதற்கு ஆதாரமாகக் காட்டப் பட்டவை எவை? வெளியிட்ட பகத்சிங்கின் நூலின் முதற் பாகமும், குடியரசு தலையங்கம் மூன்றும் ஆகும்.
அடுத்த வார ‘குடியரசில்’ ஈ. வெ. ராமசாமி ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில்,
சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது, பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை ஒழிப்பதும், அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும், அவ்வளவு அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதும், சமுதாய இயலில் சாதி பேதங்களை அகற்றுவதும், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும், பொருளியலில் சமதர்மமும் ஆகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடையே பிரசாரம் செய்யவும், அமுலுக்குக் கொண்டு வரச் செய்யவுமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால், காங்கிரசு ஆட்சியை விடப் பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகு நாளைய கருத்தாகும் என்று விளக்கம் தெரிவித்திருந்தார்.
‘சமதர்மம்’ என்றாலே கிலி பிடித்திருந்த ஆங்கில ஆட்சி, அதைப் பொருட்படுத்தவில்லை. பெரியாரின் அண்ணன் ஈ, வெ. கிருஷ்ணசாமி தண்டிக்கப்பட்டார்.