இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சரித்திரம் அறிந்தவன் சாத்திரம் பேசான்
சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை
சிந்தனைச் செல்வமே சிறந்த செல்வம்
சீவனை விட்டபின் சிரார்த்தம் எதற்கு?
சுகமென்று எதுவும் சொர்க்கத்தில் இல்லை
சூட்சுமம் என்பது சூழ்ச்சியே யாகும்
செத்ததும் விடுவான் மருத்துவன்; செத்தாலும் விடான் புரோகிதன்
சேக்கிழார் செய்ததே சிவனார் லீலைகள்
சொர்க்கம் என்பது சுரண்டி வாழ்வதற்கே
சோதிடம் சொல்வது சோற்றுக்கு என்று அறி