உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரிய இடத்துப் பெண் எனக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. காலையில் எப் படியாவது என் வீட்டுக்கு ஓடிவிடலாமென்று தீர்மா னித்துச் சந்தோஷப்பட்டேன். கண்ணம்மா அப்பொழுது எனக்கு ஒரு கட்டளை யிட்டாள். சாதாரண வேலைதான்; அதுதான் சதியாக முடிந்தது. புலியின் அகண்ட வாய்க்குள்ளே ஒரு பிள்ளை யைத் தவழ்ந்து செல்லும்படி ஆணை பிறந்தது. 66 வெள்ளிக்கோப்பை அந்த அறையிலே இருக் கிறது. அதை எடுத்துவா குமுதா!" என்றுதான் கண் ணம்மா கூறினாள். நான் அதை எடுத்துவர அறையில் நுழைந்தேன். திடீரெனக் கதவுகள் மூடிக்கொண்டன. திரும்பிப் பார்த்தேன்; உலகநாதர் நின்றார். நின்றது .C மட்டுமல்ல; கலகலவெனச் சிரித்தார். " தோற்றாய் குமுதா, தோற்றாய்" என்று ஒரு பிசாசு அலறுவது போல் இருந்தது. என் நிலைமை தவறிவிட்டது. உலகமே கிறுகிறுவெனச் சுழன்றது. ஆகாய வெளியிலே ஒரு பயங்கரச் சப்தம் கேட்பதுபோல் தெரிந்தது. பல மின்னல்கள்! இடி முழக்கங்கள் ! அதற்குப் பிறகு என்ன நடந்தது என்றே எனக் குத் தெரியாது.கண்ணை விழித்துப் பார்த்தேன். கட்டி லில் படுத்திருப்பதாக உணர்ந்தேன். அருகில் உலக நாதர் சயனித்திருந்தார்.ஏதோ சூரிய மண்டலத்தையே சுற்றி வந்துவிட்டவர் போலச் சிரித்தார்; என்னென் னவோ பேசினார். எதுவும் என் காதில் விழவில்லை. காமாந்தகாரப் பூதத்தின் இரத்தந் தோய்ந்த நகங் களால் என் இதயம் கிழிக்கப்பட்டு விட்டது. அத