உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு தொழில்களைப் பணத் தொந்திகளே தொடர்ந்து நடத்தாமல், தேசீய மயமாக்கும் திட்டங்களை, வற் புறுத்தி, வகைகள் தெரிவித்து, வழி காட்டிடும் தீர்மானங்கள். விவசாய முன்னேற்றம், விவசாயிகளின் நல் வாழ்வு பற்றிய அக்கரையைத் தெரிவித்து, அதற் காவன செய்யும்படி அரசியலாரைத் தூண்டிவிடும் தீர்மானங்கள். சித்தூரும், நாஞ்சிலும் சேர்ந்திருக்க வேண் டியது செந்தமிழ் நாட்டோடுதான் என்பதை எடுத்துரைத்து, ஆந்திரர் தமிழர் பேதத்தை வீணாகச் சிருஷ்டிக்கும் வீணர்களுக்கு விவேக போதனை செய்து, தமிழர் - ஆந்திரர் கசப்பு வளர்ந்தால் வடநாட்டார் வேட்டை அதிகமாகும் என்பதை உணர்த்திக் காட்டி, நேர்மையான முறையில் ஏற்படும் மொழிவழி அமைப் புக்களை உடனடியாக ஏற்படுத்தும் கிளர்ச்சிக்கு ஆதர வளித்து, அதற்கெனத் தீர்மானங்கள். இரயில்வே பிரச்சினையை ஆராய்ந்து, இலங்கைப் பிரச்சினையை விவரித்து, இதற்கான வழிதுறை தேடிடும் தீர்மானங்கள். நிறவெறித் திட்டத்தைக் கண்டித்து, அதற்கு ஆக்க மளிக்கும் காமன்வெல்த்திலிருந்து இந்தியாவை வெளி யேறச் சொல்லி வலியுறுத்தியும், மலேயாவில் நிரபராதி களான திராவிடருக்கு ஏற்படும்கொடுமைகளைக்கண்டித் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/12&oldid=1706251" இலிருந்து மீள்விக்கப்பட்டது