உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு அதனால் பெரியார் மாதவமேனனின் தொடர்பு கொண் டவர் என்று கூறிவிட முடியுமா? ஓமந்தூராரை ஆதரித்துப் பெரியார் பேசாத மேடை கிடையாது! அதனால் பெரியார் காங்கிரஸ் கங்காணி யாகிவிட முடியுமா? ஏன்? கம்யூனிஸ்டுகளின் நிகழ்ச்சிகள், பேச்சுக் களுக்கும் கூடத்தான் காங்கிரஸ் ஏடுகள் இடம் தரு கின்றன. அதனால் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் கங்காணி களாகிவிட முடியுமா ? காளி கோயில் கட்டியுள்ள திரு ஆர். எஸ். சர்மா அவர்களை ஆதரிப்பது குற்றமல்ல என்று கூறப்படும் போது; அதற்கு ஆரியக் கங்காணி என்று பட்டம் சூட்டப் படாமலிருக்கும் போது; குற்ற மற்றவர்களை, கொள்கை தவறாதவர்களைக் கங்காணிகள் என்று கூறிடு வது எந்த 'நீதி தேவன்" தந்த அதிசயத் தீர்ப்போ என்று புரியவில்லை ! காங்கிரஸ் வெற்றிக்கு வழி தேடுவதாக இருக்கிறது நம் போக்கு என்று கூறிடுகிற தோழர்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 'திராவிட நாடு' என்ற இலட்சியத்தைப் பல ஆண்டுகளாகக் கூறி வந்திருக்கிறோம் நாம்! 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/30&oldid=1706270" இலிருந்து மீள்விக்கப்பட்டது