பெருமூச்சு விடவில்லை. அல்லது நம்மால் முடியாத ஒன்றை அவர்க ளிடம் கொடுத்து வெற்றிவாங்கித் தரும்படி கூறவில்லை! "எம் ஒத்துழைப்பு வேண்டுமானால் உம் ஒத் துழைப்பை அளியுங்கள்" என்று கூறுவது எப்படி கோழைத் தனமாகும்? கம்யூனிஸ்டுகளைக் காட்டி, பணக்காரரை மிரட்டி, தேர்தல் வாணிபம் செய்வோர்கள் நம் செயலைப் பழிக்கலாம். பழிப்பவர்கள் சிந்திக்க வேண்டும், காங்கிரசை ஒழிக்க கம்யூனிஸ்டுகளின் தயவை நாடுவதும், சாமி யப்பா, சர்மாக்களின் துணையைத் தேடுவதும் எந்தப் பட்டியலிலே இடம் பெறுகிற கோழைத்தனம் என் பதை! கம்யூனிஸ்டு நண்பர்களிடத்திலே நமக்கு அளவற்ற மதிப்பு உண்டு! அவர்களின் தற்போதைய செயல்க ளால் மனமொடிந்த நிலையில் கடுமையான சில சொற் கள் வெளிவந்திருக்கலாம். அதை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் நமக்கும் பகை மூட்டிடக் கன காண்கிறார்கள் பலர்!
- கம்யூனிஸ்டு நண்பர்களும்
கனவு கூறியிருக்கிறார்கள், நமது பொதுச் செயலாளரும் கூறியிருக்கிறார்; தேர்த லுக்குப் பிறகாவது உறவு நீடிக்க வழி காணுவோம் என்ற கருத்தமைந்த வார்த்தைகளை ! 32