உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி என்று கூறுவதிலே தவறு இருப்பதாகத் தெரிய வில்லையே! "திராவிடம் ஒரு தனி நாடு. இதை வேறு நாட்டுப் பிரச்சினைகள், அமைப்புகள், அவைகளை மட்டும் வைத்து ஒரே கண்ணால் ஒரே கோணத்தில் பார்க்கக் கூடாது' என்றுதான் நாம் பலமுறை விளக்கங்கள் தந்து திராவிட நாட்டுப் பிரச்சினையை மக்கள் முன்னே வைத்திருக்கிறோம். ஆனால் சிலர், "தாம் பிடித்த முயலுக்கு மூன்றேகால்" என்ற தன்மையில் ஆகாதது, முடியாதது, குறுகிய நோக்கம் என்றெல்லாம் ஆரூடம் கணித்தார்களே தவிர, இன்னொரு நாட்டை உதாரணத்துக் கழைத்து நம் இதயகீதத்தை மறைக்க எண்ணினார்களே தவிர, தத்துவங்களுக்கு அடிமையாகி, நடைமுறைக்கு எதிரி யாகிவிட்டார்களே தவிர,நம் பிரச்னையின் உட்கருத்தை அறியாதவர்களாகவே ஆகிவிட்டார்கள். எதிரிகளாகவே காட்டிக் கொண்டவர்கள் நேரடி யாக எதிர்த்தார்கள் நம் பிரச்னையை! காட்டிக்கொள் ளாதவர், மறைமுகமாக எதிர்த்தார்கள். இத்தகைய எதிர்ப்புக்களுக்கெல்லாம் முடிவு காணத்தான் தேர்த லிலே திராவிடநாடு பிரச்னையை ஏற்பவர்களை ஆதரிப் பது என்று முடிவு செய்தோம். தி.மு.க. ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திட்டவர் களின் வெற்றி-திராவிட நாட்டு பிரச்னையில் முதல் 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/61&oldid=1706308" இலிருந்து மீள்விக்கப்பட்டது