உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி என்று கொடுமையான அறிக்கைகள் பறக்கவிட்டபடி, தவறுகளை மறந்துவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். கண்ணீரிலே நீலிக்கண்ணீர் என்று ஒரு வகையுண்டு ! அதை அறியாதவர்களல்ல மக்கள்! தவறுகளை எடுத்துச் சொல்பவர்கள் - அவைகளை மறந்து விடுங்கள் என்று சொல்லி ஆதரவுப் பிச்சை கேட்பவர்கள், இருதயத்திலே சொருகிய ஈட்டியை எடுக்காமலேயே இனியமொழி பேசுகிற இரக்கமற்றவ னிடம் நம்பிக்கை வைக்கச் சொல்லுகிற இனத்தைச் சேர்ந்தவர்கள்! தேர்தல் நேரத்திலே தென்றலாகவும், வெற்றிக் குப் பிறகு புயலாகவும் மாறிவிடப் போகிறவர்களை, இதுவரை மாறி இருந்தவர்களை நாம் அறியாமலில்லை. மக்கள் உணராமலில்லை. அந்த உணர்வைப் புது உப தேசங்களால் ஒழித்துவிட முடியாது! திருவாங்கூர் கொச்சி தேர்தல் முடிவுகள் இதைத்தான் எதிரொலிக் கின்றன. காங்கிரசுக்கும், அதை எதிர்த்த எல்லாக் கட்சி களுக்கும் கிடைத்த மொத்த ஓட்டுக்களை எண்ணிப் பார்க்கும் போது எதிர்க்கட்சிகள் பெருவாரியான ஓட்டுக்களைப் பெற்றிருக்கின்றன. . அது மட்டுமல்ல, காங்கிரசைவிட அதிகப்படியான ஸ்தானங்களை எதிர்க் கட்சிகள் கைப்பற்றி யிருக்கிறார் கள். [5] 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/67&oldid=1706314" இலிருந்து மீள்விக்கப்பட்டது