உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இப் பொருட்கேற்பக் கூறிக்கொள்க எவ்வாறாயினும் இப் பெரும்பாணாற்றுப் படைத் தலைவனான திரையன் முதன்முதல் தொண்டை சுற்றப்பட்டவன் ஆகான் என்பது நன்குணர்ந்துகொள்க. "தொண்டையோர் மருக என இவன் விளிக்கப்படுதல் முன் னரே காட்டினேன். இன்னும் பல்லவர் கடல் வழியினர் என்பது நந்திக் கலம்பகத்தில், "மொழியார் தொண்டைப் பன்மலர் முற்றுத் தெருவந்து விழியா ளென்றும் மேனி வெளுத்துள் மெலிவாளோ மொழியா வண்கைத் தண்ணரு ணந்தித னூர்மட்டோ வழியாந் நமரக் கடல்வட்டத் தொரு வண்கோவே" (43) என்றும் தெருவந்து விழியாள் மேனி வெளுத்து உள்ளம் மெலிவாளோ; என்றும் தெருவந்து விழியாத இவள் வெளுத்து மெலிதல்,இவள் உள்ளிருந்தபோதும் முற்றிய இவள் தொண்டைப் பன்மலர் மணத்தினானாகும். அம்மலர் மணம் நந்தி தன் ஊர்மட்டோ முற்றும் அவன் வங்கிசம் உண்டாதற்குக் காரணமான ஓசைக்கடல் சூழ் வலயத்தும் முற்றும்.இதனால் அவனை வண்கோ என மொழியார் என்க. வெளிவந்து காணாமல் உள்ளே இருப்பாளையும் தன் தொண்டை மலர் மணத்திரள் மெலியச் செய்தலான் அவனை வண் கோ என மொழியார் எ-று. இதன் கண், "நந்தி தன் வழியாந் தமரக்கடல்' என்று கொள்ள வைத்தவாறு கண்டு உண்மையுணர்க. வற்றாற் றொண்டையரும் பல்லவரும் திரையரும் எனப்பட்டார் ஒருமுடி யரசரே யாதல் துணிந்துகொள்க. மற்றித் திரையன் குடியைத் ரை தரு மரபென்று கூறித் தொண்டையோர் மருக' என இவனை விளித்தலாற் புலப்படுத்தியதன்றிப் பல்லவன் எனக் கூறாராயினர். அப்பெயர் வடமொழியாளர் எடுத்தாளும் வழக்குப்