பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii ,

எஞ்சி நின்ற எட்டுப் பத்துக்களில் முதல் ஐந்து பத்துக்களை’ முறையே, புண் உமிழ்குருதி, அடு நெய் ஆவுதி, கமழ் குரல் துழாய்’, ‘சுடர்வீ வேங்கை, வடு அடும் நுண் அயிர்’ என்ற தலைப்புகளில் வெளியிட்டேன். எஞ்சிப் பத்துக்களின் விளக்கங்கள் ஏட்டளவாய் உள்ளன. விரைவில் வெளிவரும்.

சங்க இலக்கியப் பாக்களின் தொகுப்புகளாகிய, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, வரிசையிலே, எட்டுத் தொகையின் சில நூல்களை திறனாய்வு செய்து வெளியிட்ட எனக்கு, அவ் வரிசையில் முதற்கண் வைத்துப் போற்றப்படும் பத்துப் பாட்டுப்பாக்களின் திறனாய்வு செய்ய வேண்டும் என்ற வேட்கை எழுந்தது இயல்பே. .

அவ்வேட்கையால் உந்தப்பட்ட நான் 782 அடி முதல் 103 அடி வரை உன்ன அவ்வரிசையுள் அடியளவில் சிறிய தாய முல்லைப் பாட்டினை”, முதற்கண் திறனாய்வு செய்து ‘முல்லை’ என்ற தலைப்பில் கழக வெளியீடாக வெளியிட்டேன். அடுத்து பத்துப் பாட்டுள் ஏழாவதாகத் திகழும் நெடுநல்வாடை பாடல் வரிகளை திறனாய்வு செய்து மனையுறை புறாக்கள்’ என்ற தலைப்பிலும், பத்துப் பாட்டுள் நான்காவதாகத் திகழும் பெரும் பாணாற்றுப்படை” பாடல் வரிகளை பெரும்பாணாற்றுப் படை விளக்கவுரை” என்ற தலைப்பிலும் எழிலகம் பதிப்பக வெளியீடாக வெளியிட முன் வந்துள்ளேன்.

என் முன்னைய படைப்புகளுக்கு நல்லாதரவு தந்த், தந்து வரும், தமிழ் கூறு நல்லுலகம் இவற்றையும், இவற்றைத் தொடர்ந்து வரும் பத்துப் பாட்டு வரிசை விளக்கவுரை நூல்களையும் ஆதரித்து ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

கா. கோவிந்தன்