இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்
“மனிதனின் ஆயுள்காலத்தை அதிகரிப்பது எப்படி?” என்று நிருபர் ஒருவர் ஷாவிடம் கேட்டார்.
“நான் எழுதியிருக்கும் ‘மெதுஸலா’ என்னும் புத்தகத்தைப் படியுங்கள். அதில் சொல்லியிருப்பதற்கு மேல் நான் ஒன்று சொல்வதற்கு இல்லை.
“மரணம் வந்து என் வாசல் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. அது விரும்பத்தகாத விருந்தாளி அல்ல” என்று ஷா பதில் அளித்தார்.
மற்றொரு செய்தியில், “மரணம் என்னை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறது. அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நான் சிரஞ்சீவியாக இருக்க விரும்பவில்லை” என்று ஷா கூறுகிறார்.
“முதுமை அடைந்துகொண்டு வருவதைப்பற்றி பயப்படாதீர்கள். 50 வயதிலிருந்து 60 வயது வரையிலும்,