பொன்னர்-சங்கர் துக் கொண்ட வீரமலை ஓட்டமும் நடையுமாக அங்கே சென் றான். ஆசான் வீட்டுக் கதவு உட்பக்கமாகத் தாள் போடப்பட்டிருந் தது. வாயிற்புறத்து நிலைப்படியின் இருபுறமும் உள்ள உயர்ந்த திண்ணைகளையொட்டி அமைந்திருந்த பலகணிகளில் ஒன் றின் கதவு மட்டும்; சில பேர் தூங்கும்போது திறந்திருக்கும் இமையைப் போல் சிறிதளவு திறந்திருந்தது. பரபரப்பான அந் தச் சூழ்நிலையில் மறைந்திருந்து கவனிப்பது தவறில்லை யென்றே வீரமலையின் மனதிற்பட்டது. மெதுவாகத் திண்ணை யிலேறி, பலகணி இடுக்கின் வழியாக உட்புறம் பார்த்தான். அழகுநாச்சியாரும் ராக்கியண்ணனும் கட்டிலில் அமர்ந்திருந் தனர். அழகுநாச்சியாரின் மடியில் இரண்டு குழந்தைகள்! ராக்கியண்ணன் மடியில் இரண்டு குழந்தைகள்! அழகுநாச்சி யாரும் ராக்கியண்ணனும் பேசியது வீரமலையின் காதில் விழுந்தது. அழகுநாச்சி! நமக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோது. அந்தச் செய்தி எனக்கே ஒரு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு தான் மெல்ல மெல்ல அது மகிழ்ச்சியாக மலர்ந்தது. இப் போது அந்த மகிழ்ச்சி என்னைப் பொறுத்தவரையில் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஆனால் நீ எப்படி உணரு கிறாய் என்பதுதான் எனக்குப் புரியவில்லை!' 'உங்கள் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சியும்! இருந்தாலும் உங் கள் செய்கை என் மனத்தில் ஏதோ ஒரு குழப்பத்தை உரு வாக்கியிருக்கிறது. இந்த இரண்டு குழந்தைகளும் யார்? எங் கிருந்து கொண்டு வருகிறீர்கள்? எதற்காக? உன்னிடம் சொல்லாமலா இருக்கப் போகிறேன். சொல் லத்தான் போகிறேன். சொல்லித்தான் ஆக வேண்டும். .4 'வந்தது முதல் வளைத்து வளைத்துப் பேசுகிறீர்களே தவிர, இன்னும் எந்த விபரமும் சொல்லவில்லை. இதைப் பார்க்கும் போதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது!' "சொல்லிவிடுகிறேன் அழகு! எந்தக் குன்றுடையான் குழந் தைகளின் பெயர் சூட்டு விழாவுக்குச் சென்றிருந்தேனோ; அந் தக் குன்றுடையானின் குழந்தைகள்தான் இவைகள்! 192
பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/201
Appearance