பக்கம்:பொன் நாணயம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விரும்பியதை வாங்கித் தின்னலாம்,' என்றார்.

அப்போது எனக்கு அளவில்லாத சந்தோஷம் உண்டாயிற்று. உடனே நான் கடைக்கு விரைந்து சென்றேன்; எனக்கு விருப்பமான தின்பண்டங்களை யெல்லாம் வாங்கிக்கொண்டேன்; என் நண்பர்களுக்குக் கொடுத்து நானும் தின்றேன். ஆ! அன்று நான் அடைந்த சந்தோஷம் என்றும் அடைந்ததில்லை.

பிள்ளைகளே, என் எசமானர் அன்று முதல் என்மேல் மிகவும் அன்பாக இருந்தார். அதிக விலை உயர்ந்த பொருள்களையும் அவர் என்னிடம் கொடுத்து வைப்பார். நானும் அவரிடம் மிகவும் உண்மையாய் நடந்து வந்தேன்.

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/43&oldid=1318236" இலிருந்து மீள்விக்கப்பட்டது