பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50



தெரிந்தவராக இருப்பது நல்லது. அப்போழுது தான் எல்லோரும் உற்சாகமாக இதில் கலந்து கொள்ள முடியும்.

2. பளிச்சென்று ஆளைப் புரிந்துகொள்ளும் வகையில், சைகையால் பல குறிப்புக்களையும் காட்டாமல், ஒருசில அசைவுகள், ஜாடையால் கூறினால்தான், மற்றவர்கள் சிந்திக்கவும், யூகிக்க முயலவும் வாய்ப்பளிக்கும் வகையில் ஆட்டம் அமையும்.

3. கூட்டத்தில் உள்ளவர்கள், யாரென்று உடனே தெரிந்து கொண்டாலும், தனக்குத் தெரியும் என்று கத்திக் கூச்சல் போடக் கூடாது. ஒவ் வொருவருக்கும் வரிசை வரிசையாக வாய்ப்பு வரும் என்பதால், தங்களுக்குரிய வாய்ப்பு வரும் வரை காத்திருந்து ஆடினால்தான், ஆட்டம் இன்னும் ஆனந்தமாக அமையும்.

4. சைகை செய்பவர்கள் சுறுசுறுப்பாகவும்: பரபரப்பாகவும், ஆட்டம் அமையும் வகையில் நடித்துக் காட்டவேண்டும்.