உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 403

ஒன்று, புத்தகயையில் இருபத்தைந்து நூற்றாண்டுகட்கு முன்பு நற்றவ மூர்த்தியான சித்தார்த்தர் எந்தப் போதி மரத்தடியில் அமர்ந்து ஞானமடைந்தாரோ அதே மரத்தின் கன்று. அதைப் பர்மியப் பிரதம மந்திரி திரு. யு. நூ. நட்டார். இலங்கை அநுராதபுரத்திலுள்ள புராதனப் போதிவிருட்சத்தின் கன்று ஒன்றைச் சிக்கிம் சமஸ்தானத்து மகராஜ குமார் நட்டுவைத்தார்.