50
மகான் குருநானக்
இவ்வாறு தொடர் பயணம் செய்து வந்து கொண்டே இருந்த குருநானக், திடீரென்று தனது சீடர்களிடம், நான் பிறந்த ஊருக்கு உடனே செல்ல வேண்டும். எனது நண்பர் என்னைப் பார்க்க வேண்டும் என்று காத்துக் கிடக்கின்றார் என்றார். இந்த வார்த்தையைக் கேட்ட மர்தானாவும், பாலாவும், யார் அந்த நண்பர் என்று சிந்தித்தவாறே சத்குருவுடன் தாள்வாண்டிக்குப் புறப்பட்டு நடந்தார்கள்.
தாள்வாண்டி ஊர்த் தலைவர் ராய்புலார் சத்குருவின் நேருங்கிய முதல் நண்பரல்லவா? அவர் மரணப் படுக்கையிலே கிடந்தார். தான்் சாவதற்குள் ஒருமுறை தனது நண்பர் சத்குரு நானக்கை காண வேண்டும் என்று ஆசையோடு ஊசலாடிக் கோண்டிருந்தது ஊர்த் தலைவரான ராய்புலார் உயிர். இதை உணர்ந்து கொண்ட சத்குரு உடனடியாக தாள்வாண்டி வந்து சேர்ந்தார்.
சத்குரு நானக்கை ராய்புலார் பார்த்து மரண மகிழ்ச்சி அடைந்தார். இது எத்தகைய நட்புப்பேறு என்று ஊரார் வியந்து பேசிக் கொண்டார்கள்.
இராய்புலார், சத்குருவை நோக்கி, தூய நெஞ்சமுடைய ஞானியே, நான் உம்மை வணங்க வேண்டும் என்று என் இதயம் துடிக்கின்றது. உடல் தான் இடம் தரவில்லை. எனது நெஞ்சும் அன்பும் உங்களுடைய திருப்பாதங்களிலே வீழ்ந்து பணிந்து கிடக்கின்றது என்று ராய்புலார் சத்குருவின் தோள்மேலே சாய்ந்தார்.
உடனே சத்குரு, எனது நெஞ்சைக் கவர்ந்த இளம் வயது அருமை நண்பரே, உங்களுடைய இதயம் எனக்கு அனுப்பிய செய்தியை அறிந்த பின்புதான் நான் ஓடோடி வந்தேன் என்று கனிவான சொற்களைக் அவர் காதுகளில்ே விழுமாறு கூறிய படியே, தனது கையைச் சத்குரு ராய்புலார் தலையிலே வைத்துத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். ராய்புலார் மனம் அமைதியோடு அவரது தோள் மீது சாய்ந்தபடியே இருந்த போது அவர் இறந்து போனார்!