பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蒙党 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். இந்த எனது எண்ணக் கோவிலின் கதவுகள், §§§ 3 * - பாசுரங்களால் திறக்கப்படுபவை அல்ல! பாசுரம் பாடுகின்ற அருளாளர்கள் அல்லது, தேவார நால்வர்கள் பார்தனிலே இன்று எவருமிலர் அவர்கள் தோன்றுகின்ற காலமும் அல்ல இது. அதனால், இதயத் தூய்மை என்ற ஒன்று இருந்தாலே போதும். துழையலாம் உள்ளே!

தாங்கள் எவ்வாறு மன சுத்தமாக உமது எண்ணக் கோட்டத்துள் துழைவது என்று, திருப்பிக் கேட்காதீர்கள், என்னை:

மனசாட்சியும் - மனிதாபிமானமும் உள்ள எந்த மனிதனும், சுத்தமாகின்றான்!

அவை அற்றவன் அற்பனாகின்றான்: உற்றவன் மனிதனும் தெய்வமாகலாம் என்ற வள்ளுவம் ஆகின்றான்!

மக்கள் சந்தைக்கு நடுவே விலை போகக் கூடிய சரக்குகள் எவ்வளவோ உள்ளன!

அற்பங்கள், இன்று அரசியல் அங்காடிகளில் விலைபோக வில்லையா?

சட்டத்தை மீறுகின்ற சண்டாளர்கள், இன்று பஞ்ச கல்யாணி குதிரைமீது சவாரி செய்ய வில்லையா?

அந்த பஞ்சமாப் பாதகர்கள் பின்னாலே வரும் பரிவாரங்கள், இயற்கையால் படைக்கப்பட்ட ஆன்மாக்களாக இருக்கு மென்று நம்புகிறீர்களா?

'மூளை முளைத்த மிருகங்களே! அனைத்தையும் திறமையாகச் செய்கின்றோம்' என்ற வேதாந்தம், உங்களுடைய கைகளிலே உள்ளது என்ற நம்பிக்கையா?

அந்த ஆத்துமங்களின் வாழ்த்தொலிகள் அனைத்தும், அற்பத்தின் செவிகளுக்கே விருந்தாக அமைவன அல்லவா?

மக்கள் திலகம், பேசும் நிலையிலிருந்த போதும் சரி, சரளமான சொற்களை அச்சடிக்கா நாவோடிருந்த நேரத்திலும்