பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

பொதுவாக நோக்கும்போது கார்நாற்பது காட்டும் தலைமகன் கற்பு வாழ்க்கையில் ஈடுபட்ட தலைமகனாவே தோற்றமளிக்கிறார். தலைமகன்தன் களவு வாழ்க்கையை இவ்விலக்கியம் குறித்து நிற்கவில்லை.

நிறைவுரை

இவ்வாறாகக் கார் நாற்பது காட்டும் தலைமகன் அறிவிற் சிறந்தவனாக, இசை ஈடுபாடு மிக்கவனாக, இயற்கை ஈடுபாடு உடையவனாக, புகழில் நாட்டம் உடையவனாக, பழிக்கு அஞ்சும் பண்பினனாக நினைத்ததை முடிப்பவனாக , சொற்றிறம்பாதவனாக, விருந்தில் விருப்பம் மிக்கவனாக, செல்வத்தில் ஈடுபாடு கொண்டவனாக, நுண்ணிய நோக்கு உடையவனாக, இன்சொற் கூறுபவனாகத் துலங்குகின்றான். அகவாழ்க்கையில் கருணை மறவனாகவும் கூடலில் விருப்பம் மிக்கவனாகவும் அன்பு நெஞ்சத்தனாகவும் தலைமகளின் நினைவில் வாடுபவனாக வம் காட்சி அளிக்கிறான். பொதுவாக நோக்கும் உயர் பண்புகளின் இருப்பிடமாகக் கார் நாற்பதின் தலைவன் விளங்குகின்றான்.