பக்கம்:மதன கல்யாணி-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 24

3

வண்டிப் பக்கம் திரும்பி வண்டிக்காரனைக் கீழே இறங்கி வரும்படி கூற, அவன் உடனே கீழே இறங்கிக் கதவண்டை வந்து சேர்ந்தான். சிவஞான முதலியார், “அம்மா அம்மா” என்று கூப்பிடும்படி கூற, அவன் மிகவும் உரத்த குரலில், “அம்மா அம்மா” என்று கூவி, சவுக்கின் கோலால் இரும்புக் கம்பியில் லொட லொடவென்று ஒசை செய்தான். கால் நாழிகை நேரம் வரையில் எவ்வித மறுமொழியும் கிடைக்காது இருந்தமையால், அவன் முன்னிலும் அதிகமாக ஓங்கிக் கூவத் தொடங்கினான். அப்போது சுமார் பத்தரை மணி நேரம் இருக்கலாம் ஆதலால், உள்ளே இருந்தோர் அயர்ந்து தூங்கி இருப்பார்களோ என்ற நினைவோடு சிவஞான முதலியார் விடாமல் கூப்பிடும்படி வண்டிக்காரனைத் துண்ட, அவன் அவ்வாறே செய்து கொண் டிருந்தான். மறுநாட் காலையில் எப்படியும் சப் இன்ஸ்பெக்டர் பாலாம்பாளிடத்தில் வாக்குமூலம் வாங்கி விடுவார் ஆதலால் தாம் எப்பாடு பட்டாகிலும் அன்று இரவிற்குள் அவளைக் கண்டு அவளை சரிப்படுத்தி, மைனர் சப்ஜெயிலுக்குப் போகாமல் தடுத்து அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்ற உறுதி செய்து கொண்டிருந்தவர் ஆதலால், சிவஞான முதலியார், அவனது தொண்டை எட்டிய வரையில் ஓங்கி அழைக்கும்படி வண்டிக்காரனைத் துண்ட, அவன் அவரிடம் மாதச்சம்பளம் வாங்கும் ஆள் ஆதலால், தனது கன்னத்தில் கையை வைத்துத் தொண்டை கிழிந்து போகாமல் முட்டுக் கொடுத்துக் கொண்டு, “ஏ அம்மோ ஒ அம்மோ!” என்று கூச்சலிட்டு எழும்பி எழும்பிக் குதித்தான். அவ்வாறு அரை நாழிகை நேரம் கழிய, கட்டிடத்தில் ஒரு விளக்கு நகருவது போலக் காணப்பட்டது. அது வரையில் மிகுந்த ஏக்கம் கொண்டு தளர் வடைந்து நின்ற சிவஞான முதலியாரது மனதில் அப்போதே பெருத்த உற்சாகமும் மகிழ்ச்சியும் உண்டாயின. விடாமல் கத்திக் கொண்டே இருக்கும்படி அவர் அப்போதும் வண்டிக்காரனைத் துண்டிக் கொண்டே இருந்தார். அந்த வண்டிக்காரனது நிலைமையோ மகா பரிதாபகரமாக ஆகிவிட்டது. ஏனெனில், அவன் தனது தொண்டையை எவ்வளவு தூரம் கிழித்துக் கொள்ள முடியுமோ அவ்வளவும் தொண்டையைக் கிழித்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/261&oldid=649756" இலிருந்து மீள்விக்கப்பட்டது