பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் மொழியே சீர்சால் விளக்கே ! முந்திய மொழியே முழுமையின் ஒளியே ! கற்றோர் நெஞ்சங் களிக்கும் வகையில் ஞான ஒளியினை நல்கிடும் விளக்கே ! வறுமையும் இடரும் வட்கார் பகையும் உறுமிடி புயலென உருத்தெழு நிலையிலும் என்னுள் நின்றொளி எழிலுற விளங்கிட நண்ணும் என்னுயிர் நந்தா விளக்கே ! ஆய்தொறும் ஆய்தொறும் அரும்பொருள் நல்கலில் ஒய்தல் இல்லா உயர்கொடை விளக்கே ! பலபல மொழிகள் பரந்திவண் தோன்றினும் உலகில் நிகரிலா தோங்குவான் விளக்கே ! நையும் நிலையிலும் நான்களி கொள்ள உய்யும் வழிதரும் பொய்யா விளக்கே ! காற்றும் மழையும் கடுகிய போதும் ஏற்றிய உனக்கோர் இடையூ றின்றிப் போற்றுதல் கடனெனப் பூண்டுளேன் நோன்பு: _ - வட்கார்-பகைவர்