பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 குண்டொன்று தலைவீழக் குருதி வெள்ளம் கொட்டிடவும் வானத்தில் பகைவன் ஊர்தி ή கண்டங்குச் சுட்டெரித்து வீழ்த்தி விட்டுக் கண்மலர முகமலர அதனைப் பார்த்துக் கொண்டுயிரை விட்டானே எனது நாட்டுக் கொற்றவனாம் ஆறுமுகம் அவனைப் போன்றோர் மண்டமரில் திறங்காட்டப் பாகித் தான மாவீரர் புறங்காட்ட வெற்றி கண்டோம். மூட்டிவிட்ட சினத்தீயில் யாகி யாகான் முகம்பொசுங்கி அகம் நசுங்கி இருளில் வீழ்ந்தான் பூட்டுடைத்து வெளிவந்தார் வங்க மாந்தர்;

  • பூத்துவிட்டான் புதுக்கதிரோன் கிழக்கு வானில்: கேட்டுமனங் கொண்டிருக்கும் பூட்டோ மட்டும்

கிலிபிடித்துந் தோல்வியினால் புலம்பு கின்றான் : நாட்டவரை ஏமாற்ற உளறு கின்றான்; நல்லறிவு பெற்றதுபோல் தோன்ற வில்லை. புலம்பட்டும் நமக்கென்ன ? புத்தி கெட்டுப் போர்முறையே விருப்பமெனில் வந்த பின்னர்க் கலங்கட்டும் தனித்திருந்தே ; அமைதி ஒன்றே காலமெலாம் விரும்புகிறோம்; அதைக்கெ டுத்துப் புலங்கெட்ட பூட்டோவும் போர்தொ டுத்தால் பொன்றட்டும் நமக்கென்ன ? நமது நாட்டில் சிலம்பட்டும் போர்முரசு1 மக்கள் வெள்ளம் திரளட்டும் ஒருமுகமாய்! ஒருகை பாப்போம். கேட்டுமனம் - கெடுதலையுடைய மனம்